செய்திகள்

நாகையில் 12 பேருக்கு விலையில்லா தையல் எந்திரங்கள்

Published On 2017-02-14 20:34 IST   |   Update On 2017-02-14 20:35:00 IST
நாகையில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 12 பயனாளிகளுக்கு தலா ரூ.3465 வீதம் மொத்தம் ரூ.41,580 மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரங்களை கலெக்டர் வழங்கினார்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகளுக்கான கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 10 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 223 என மொத்தம் 233 மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 12 பயனாளிகளுக்கு தலா ரூ.3465 வீதம் மொத்தம் ரூ.41,580 மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரங்களை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) தேன்மொழி மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News