செய்திகள்

நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும்: கமல் ஹாசன் டுவிட்

Published On 2017-02-13 21:25 IST   |   Update On 2017-02-13 21:25:00 IST
நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும். தீர்ப்பு வேறு தீர்வு வேறு. நாளை மற்றொரு நாளே. பொருத்தாரே பூமியாள்வர் என்று கமல் ஹாசன் டுவிட் செய்துள்ளார்.
நடிகர் கமல் ஹாசன் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ‘‘நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும். தீர்ப்பு வேறு தீர்வு வேறு. நாளை மற்றொரு நாளே. பொருத்தாரே பூமியாள்வர்’’ என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவிக் கொண்டிக்கும் நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு  உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்க இருக்கிறார்கள்.

இந்நிலையில் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் கருத்து தீர்ப்புடன் தொடர்புடையதாக இருக்கும் என கூறப்படுகிறது.

Similar News