செய்திகள்

தாளவாடி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் பலி

Published On 2017-02-13 17:32 IST   |   Update On 2017-02-13 17:32:00 IST
தாளவாடி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

தாளவாடி நெய்தாள புரத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 45) தொழிலாளி. இவர் அப்பகுதியில் உள்ள புளியமரத்தில் ஏறி புளியம்பழத்தை உலுக்கி கொண்டு இருந்தார். அப்போது கால் தவறி அவர் கீழே விழுந்து விட்டார்.

இதனால் படுகாயம் அடைந்த குஞ்சான் சாமராஜ் நகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பிறகு மேல் சிகிச்சைக்காக மைசூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே பாதாபாக இறந்தார்.

இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News