செய்திகள்
சிவகங்கையில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி: 5 பேர் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டத்தில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயம் நடத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
சிவகங்கை:
சிவகங்கை தாலுகா, மதகுபட்டி அருகே உள்ள செங்குழிப்பட்டியில் நேற்று அனுமதியின்றி, உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் மாட்டுவண்டி பந்தயம், குதிரை ரேஸ் ஆகியவை நடந்தது.
இது குறித்து மதகுபட்டி கிராம நிர்வாக அதிகாரி மூர்த்தி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம் நடத்தியதாக அதே ஊரைச் சேர்ந்த காளிமுத்து, கதிரவன், சுந்தர்ராஜன் ஆகிய 3 பேர் மீது மதகுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி வழக்குப்பதிவு செய்துள்ளார்.
காளையார்கோவில் அருகே உள்ள சோலைமுடி கிராமத்தில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் அதே ஊரைச் சேர்ந்த நாகராஜன், புவனேஸ்வரன் மற்றும் சிலர் மீது காளையார் கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பராயலு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
சிவகங்கை தாலுகா, மதகுபட்டி அருகே உள்ள செங்குழிப்பட்டியில் நேற்று அனுமதியின்றி, உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் மாட்டுவண்டி பந்தயம், குதிரை ரேஸ் ஆகியவை நடந்தது.
இது குறித்து மதகுபட்டி கிராம நிர்வாக அதிகாரி மூர்த்தி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம் நடத்தியதாக அதே ஊரைச் சேர்ந்த காளிமுத்து, கதிரவன், சுந்தர்ராஜன் ஆகிய 3 பேர் மீது மதகுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி வழக்குப்பதிவு செய்துள்ளார்.
காளையார்கோவில் அருகே உள்ள சோலைமுடி கிராமத்தில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் அதே ஊரைச் சேர்ந்த நாகராஜன், புவனேஸ்வரன் மற்றும் சிலர் மீது காளையார் கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பராயலு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.