செய்திகள்

கல்லூரி மாணவி மாயம்: வேன் டிரைவர் மீது புகார்

Published On 2017-02-12 23:05 IST   |   Update On 2017-02-12 23:05:00 IST
ஈரோட்டில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு:

ஈரோடு நல்லித்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சதீஸ். ஜவுளி வியாபாரி. இவரது மகள் நிவேதா (வயது17). நிவேதா ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

நிவேதா கடந்த டிசம்பர் மாதம் 16-ந் தேதி கல்லூரி போனவர் வீடு திரும்பவில்லை. அவரை தோழிகள் வீடுகளிலும் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அக்ரகாரத்தில் உள்ள ஒரு வேன் டிரைவர், அவரை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

இதையொட்டி மாணவி நிவேதாவின், தந்தை சதீஷ் ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதில், ‘‘என்மகளை வேன் டிரைவர் கடத்தி சென்றிருக்கக்கூடும் என சந்தேகப்படுகிறோம். அவரிடமிருந்து என்மகளை மீட்டு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்’’ என்று கூறி உள்ளார்.

Similar News