செய்திகள்

மணல்மேடு அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

Published On 2017-02-11 16:31 IST   |   Update On 2017-02-11 16:31:00 IST
மணல்மேடு அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை:

மணல்மேடு அருகே மேலப்பனையூர் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராஜேஷ் (வயது22). கூலி தொழிலாளி. இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் வீட்டின் அருகே உள்ள ஆற்றிற்கு சென்ற போது வலிப்பு நோய் வந்து ஆற்றில் விழுந்து மூழ்கியதாக கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து மணல்மேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News