செய்திகள்
திருப்பத்தூரில் 2 போலி டாக்டர்கள் கைது
திருப்பத்தூரில் 2 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் போலி டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதாக அரசுக்கு புகார்கள் வந்தன.
இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை இணை இயக்குநர் சுரேஷ்குமார், கண்காணிப்பாளர் ரமேஷ், மருந்தக ஆய்வாளர் பிரபு மற்றும் திருப்பத்தூர் டவுன் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினார்கள்.
அப்போது திருப்பத்தூர் நடுத்தெருவில் நிர்மல் (வயது70), பெரிய கடைவீதியில் அப்துல் சுபகான் (71) ஆகியோர் டாக்டருக்கு படிக்காமல், நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். போலி டாக்டர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் போலி டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதாக அரசுக்கு புகார்கள் வந்தன.
இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை இணை இயக்குநர் சுரேஷ்குமார், கண்காணிப்பாளர் ரமேஷ், மருந்தக ஆய்வாளர் பிரபு மற்றும் திருப்பத்தூர் டவுன் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினார்கள்.
அப்போது திருப்பத்தூர் நடுத்தெருவில் நிர்மல் (வயது70), பெரிய கடைவீதியில் அப்துல் சுபகான் (71) ஆகியோர் டாக்டருக்கு படிக்காமல், நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். போலி டாக்டர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.