செய்திகள்

நாகை மாவட்டத்தில் மதுக்கடைகள் நாளை மூடல்: கலெக்டர் அறிவிப்பு

Published On 2017-02-08 15:20 IST   |   Update On 2017-02-08 15:20:00 IST
வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும்.

நாகப்பட்டினம்:

வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும்.

அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. மீறினால் மதுபான விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News