செய்திகள்
பவானி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
பவானி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி:
பவானி அடுத்த தொட்டிபாளையம் கிராமம், மோளகவுண்டன்புதூர் காலனியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 58).தொழிலாளி.
துரைசாமிக்கு எலப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை என கூறப்படுகிறது.
இதனால் துரைசாமி மனவேதனையுடன் இருந்தார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து வாந்தி எடுத்தார்.
அருகில் உள்ளவர்கள் துரைசாமியை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு துரைசாமியை கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.எனினும் சிகிச்சை பலனின்றி துரைசாமி பரிதாபமாக இறந்தார்.