செய்திகள்
ரூ.10 லட்சம் கேட்டு சித்ரவதை செய்ததால் புதுப்பெண் தற்கொலை - பெற்றோர் பரபரப்பு புகார்
ரூ.10 லட்சம் கேட்டு சித்ரவதை செய்ததால் புதுப்பெண் தற்கொலை செய்துக் கொண்டதாக பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அடுத்த சின்னியம்பாளையம் சேதுராம் நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது33). சிறுவயதிலேயே இவரது தாயும் தந்தையும் இறந்து விட்டனர். இவரது அத்தை ராணி (59) பராமரிப்பில் பாபு வளர்ந்து வருகிறார்.
ஈரோடு தில்லை நகரில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த அண்ணாமலை, சாந்தி ஆகியோரின் மகள் அருணா (27)வுக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.
அருணா ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். திருமணமான பின்பு வேலைக்கு செல்ல வில்லையாம்.
நேற்று காலை பாபு வங்கிக்கு சென்று விட்டார். மதியம் 2 மணியளவில் வீட்டில் பாபுவின் அத்தையும் அருணாவும் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.
நேற்று மாடிக்கு சென்ற அருணா மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. தீ உடலில் பரவியதும் அருணாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் பாபுவின் அத்தை ஆகியோர் ஓடி வந்து காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் காப்பாற்ற முடியவில்லை. அதே இடத்தில் அருணா உடல் முற்றிலும் எரிந்து கருகிய நிலையில் பரிதாபமாக இறந்தார். மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதை கேள்விப் பட்டதும் ஆத்தூரில் உள்ள அருணாவின் பெற்றோர் அண்ணாமலை, சாந்தி மற்றும் உறவினர்கள் கதறியழுதபடி வந்தனர்.
அவர்கள் வீட்டில் கருகிய நிலையில் கிடந்த மகளின் உடலை பார்த்து அழுது துடித்தனர். ‘‘எங்க பொண்ணை கொன்னுட்டாங்களே’’ என உறவினர்கள் ஆவேசம் அடைந்தனர். இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடுத்தனர்.
இந்த நிலையில் அருணாவின் பெற்றோர் மொடக்குறிச்சி போலீசில் பரபரப்பு புகார் மனு கொடுத்தனர். அதில், ‘‘கடந்த ஒரு மாதமாக என் மகளின் கணவர் பாபு மற்றும் அவரது அத்தையும் ரூ.10 லட்சம் வாங்கி கொண்டு வா என கேட்டு கொடுமை படுத்தினர். மேலும் வாஷிங்மிஷின் போன்ற பொருட்களையும் வங்கி வா என சித்ரவதை செய்தனர்.
அவர்களின் கொடுமை தாங்க முடியாமல் எங்கள் மகள் இப்படி அநியாயமாக கருகி இறந்து விட்டாள். அவர்களை சும்மாவிடக் கூடாது. நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
இன்று காலை 10 மணி வரை அருணாவின் உடலை எடுக்கவில்லை. ஈரோடு ஆர்டிஓ நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளார். முன்னதாக ஈரோடு டி.எஸ்.பி சம்பத் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மொடக்குறிச்சி அடுத்த சின்னியம்பாளையம் சேதுராம் நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது33). சிறுவயதிலேயே இவரது தாயும் தந்தையும் இறந்து விட்டனர். இவரது அத்தை ராணி (59) பராமரிப்பில் பாபு வளர்ந்து வருகிறார்.
ஈரோடு தில்லை நகரில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த அண்ணாமலை, சாந்தி ஆகியோரின் மகள் அருணா (27)வுக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.
அருணா ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். திருமணமான பின்பு வேலைக்கு செல்ல வில்லையாம்.
நேற்று காலை பாபு வங்கிக்கு சென்று விட்டார். மதியம் 2 மணியளவில் வீட்டில் பாபுவின் அத்தையும் அருணாவும் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.
நேற்று மாடிக்கு சென்ற அருணா மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. தீ உடலில் பரவியதும் அருணாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் பாபுவின் அத்தை ஆகியோர் ஓடி வந்து காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் காப்பாற்ற முடியவில்லை. அதே இடத்தில் அருணா உடல் முற்றிலும் எரிந்து கருகிய நிலையில் பரிதாபமாக இறந்தார். மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதை கேள்விப் பட்டதும் ஆத்தூரில் உள்ள அருணாவின் பெற்றோர் அண்ணாமலை, சாந்தி மற்றும் உறவினர்கள் கதறியழுதபடி வந்தனர்.
அவர்கள் வீட்டில் கருகிய நிலையில் கிடந்த மகளின் உடலை பார்த்து அழுது துடித்தனர். ‘‘எங்க பொண்ணை கொன்னுட்டாங்களே’’ என உறவினர்கள் ஆவேசம் அடைந்தனர். இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடுத்தனர்.
இந்த நிலையில் அருணாவின் பெற்றோர் மொடக்குறிச்சி போலீசில் பரபரப்பு புகார் மனு கொடுத்தனர். அதில், ‘‘கடந்த ஒரு மாதமாக என் மகளின் கணவர் பாபு மற்றும் அவரது அத்தையும் ரூ.10 லட்சம் வாங்கி கொண்டு வா என கேட்டு கொடுமை படுத்தினர். மேலும் வாஷிங்மிஷின் போன்ற பொருட்களையும் வங்கி வா என சித்ரவதை செய்தனர்.
அவர்களின் கொடுமை தாங்க முடியாமல் எங்கள் மகள் இப்படி அநியாயமாக கருகி இறந்து விட்டாள். அவர்களை சும்மாவிடக் கூடாது. நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
இன்று காலை 10 மணி வரை அருணாவின் உடலை எடுக்கவில்லை. ஈரோடு ஆர்டிஓ நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளார். முன்னதாக ஈரோடு டி.எஸ்.பி சம்பத் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.