செய்திகள்

வேதாரண்யத்தில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் படுகாயம்

Published On 2017-01-29 15:52 IST   |   Update On 2017-01-29 15:52:00 IST
வேதாரண்யத்தில் நடந்து சென்ற முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் வ.உ.சி.நகரை சேர்ந்தவர் ராசி (வயது 86). இவர் சோமநாதர் கோயிலடியில் உள்ள கடையில் காய்கறி வாங்கி கொண்டு தனது வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ராசி வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News