செய்திகள்

ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்து மாநகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2017-01-20 19:35 IST   |   Update On 2017-01-20 19:35:00 IST
தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி, நகராட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு:

தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி, நகராட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு மாநில தலைவர் வெங்கிடுசாமி தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன் பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு ஜல்லிக் கட்டு ஆதரவாக கோ‌ஷங்களை எழுப்பினர். ஈரோடு மாநகராட்சி தொழில்நுட்ப பணியாளர்கள் சங்க தலைவர் பழனிசாமி, துணைத்தலைவர் சரவணன், செயலாளர் சிவக்குமார் உள்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Similar News