செய்திகள்
அந்தியூர் அருகே விவசாயிகள் திடீர் சாலை மறியல்: 4 பஸ்களை சிறை பிடித்து போராட்டம்
அந்தியூர் அருகே கோவிலூரில் உள்ள எண்ணமங்கலம் ரோட்டில் விவசாயிகள் இன்று காலை திடீர் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அந்தியூர்:
அந்தியூர் அருகே கோவிலூரில் உள்ள எண்ணமங்கலம் ரோட்டில் விவசாயிகள் இன்று காலை திடீர் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
இவர்கள் நடு ரோட்டில் அமர்ந்து வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும், தடைசெய் தடை செய் பீட்டாவை தடை செய் போன்ற கோஷங்களை எழுப்பியபடி சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக 2 அரசு பஸ்கள் ஒரு தனியார் பஸ்,மற்றும் தனியார் மில்லுக்கு பணியாளர்களை ஏற்றி செல்லும் 4 பஸ்கள் சென்றன.
இந்த பஸ்களை அங்கிருந்து செல்ல அனுமதிக்காமல் மறியலில் ஈடுபட்டவர்கள் சிறைபிடிததனர்.
இது பற்றி தகவல் கிடைத்தவுடன் அந்தியூர், வெள்ளி திருப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சு நடத்தினர்.
இதன்பிறகு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த போராட்டம் காரணமாக அந்த வழியாக செல்லும் போக்குவரத்து இன்று காலை 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
அந்தியூர் அருகே கோவிலூரில் உள்ள எண்ணமங்கலம் ரோட்டில் விவசாயிகள் இன்று காலை திடீர் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
இவர்கள் நடு ரோட்டில் அமர்ந்து வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும், தடைசெய் தடை செய் பீட்டாவை தடை செய் போன்ற கோஷங்களை எழுப்பியபடி சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக 2 அரசு பஸ்கள் ஒரு தனியார் பஸ்,மற்றும் தனியார் மில்லுக்கு பணியாளர்களை ஏற்றி செல்லும் 4 பஸ்கள் சென்றன.
இந்த பஸ்களை அங்கிருந்து செல்ல அனுமதிக்காமல் மறியலில் ஈடுபட்டவர்கள் சிறைபிடிததனர்.
இது பற்றி தகவல் கிடைத்தவுடன் அந்தியூர், வெள்ளி திருப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சு நடத்தினர்.
இதன்பிறகு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த போராட்டம் காரணமாக அந்த வழியாக செல்லும் போக்குவரத்து இன்று காலை 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது.