செய்திகள்
ஈரோடு அருகே இளம்பெண் திடீர் மாயம்
ஈரோடு அருகே வீட்டில் தனியா இருந்த இளம்பெண் திடீரென மாயமானார்.இது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார்.
ஈரோடு:
ஈரோடு சூளை மல்லிகை நகரை சேர்ந்தவர் சிவா, இவரது மனைவி ஜிஷா (வயது 32).
சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த ஜிஷா யாரிடமும் சொல்லாமல் வெளியில் சென்றார். இதன் பிறகு அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது தெரியவில்லை. காணாமல் போன அவரை பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. எனவே இதுபற்றி வீரப்பன் சத்திரம் போலீசில் சிவா புகார் செய்து உள்ளார். அதில் காணாமல் போன தனது மனைவி ஜிஷாவை கண்டு பிடித்து கொடுக்கும்படி கூறி உள்ளார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.