செய்திகள்

அரியலூர் அருகே இளம்பெண் கொலையில் மேலும் 2 பேர் கைது

Published On 2017-01-18 10:14 GMT   |   Update On 2017-01-18 10:14 GMT
அரியலூர் அருகே இளம்பெண் கொலையில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கீழமாளிகை கிராமத்தில், அழகுதுரை என்பவருக்கு சொந்தமான கிணற்றில் சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் நந்தினி (17) என்பவர் பிணமாக கிடந்தார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், கீழமாளிகை கிராமத்தைச் சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி மணிகண்டன் (26) , நந்தினியை காதலித்து கர்ப்பமாக்கியதும் , நந்தனி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தவே, ஆத்திரமடைந்த மணிகண்டன், தனது கூட்டாளியான அயன் தத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் (28), வெற்றி செல்வன் (26) , கீழமாளிகையைச் சேர்ந்த திருமுருகன் (27) ஆகியோருடன் சேர்ந்து நந்தினியை கொலை செய்து கிணற்றில் வீசியதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், மணிகண்டன், மணிவண்ணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய வெற்றிச்செல்வன், திருமுருகன் ஆகிய இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News