செய்திகள்
பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி கார் மோதி பலி
பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி கார் மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள ஆதியூர் தட்டங்கரை என்ற இடத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 32).
இவர் குன்னத்தூரில் உள்ள ஒரு பேக்காரி கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இவர் வாய்ப்பாடியில் இருந்து விஜயமங்கலத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டு இருந்தார்.
அப்போது கோவையில் இருந்து சேலத்துக்கு சென்ற ஒரு கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சந்திர சேகர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.