செய்திகள்

அரியலூர் அருகே விவசாயி தற்கொலை: போலீசார் விசாரணை

Published On 2017-01-16 08:41 GMT   |   Update On 2017-01-16 08:41 GMT
அரியலூர் அருகே விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள காங்கேயன்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 35). விவசாயியான இவர் அவரது நிலத்தில் கத்திரிக்காய் பயிரிட்டிருந்தார்.

இந்நிலையில் தண்ணீர் இல்லாததால் கத்திரிக்காய்கள் அனைத்தும் கருகின. இதனால் மனவேதனையில் இருந்து வந்த செல்வகுமார் இன்று காலை வயலிலேயே வி‌ஷம் குடித்து விட்டார். உயிருக்கு போராடிய அவரை அப்பகுதி மக்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே இறந்தார்.

இது குறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News