செய்திகள்

தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி 3 வாலிபர்கள் பலி

Published On 2017-01-09 16:54 IST   |   Update On 2017-01-09 16:54:00 IST
தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி 3 வாலிபர்கள் பலியானார்கள்.

அம்மாப்பேட்டை:

தஞ்சை அருகே உள்ள கத்தரிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் விக்னேஷ் (18). அதே பகுதியை சேர்ந்தவர்கள் செந்தமிழ் செல்வன் (20), ராஜ் குமார் (19). இவர்கள் 3 பேரும் கொத்தனார் வேலை பார்த்து வந்தனர்.நேற்று இரவு 3 பேரும் அம்மாப்பேட்டையில் இருந்து தஞ்சை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தனர். தஞ்சை- நாகை சாலையில் புலவர் நத்தம் அருகே உள்ள கள்ளிமேடு பகுதியில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது ஒரத்தநாடு பருத்தி கோட்டையை சேர்ந்த கவியரசன் மற்றும் அம்மாப்பேட்டை கோவிலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த தினேஷ் என்கிற தினேஷ் குமார் (24) ஆகியோர் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். இரு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் 5 வாலிபர்களும் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு விக்னேஷ், செந்தமிழ் செல்வன் ஆகியோர் இறந்தனர். இன்று அதிகாலை தினேஷ் என்கிற தினேஷ் குமார் இறந்தார். மற்ற 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News