செய்திகள்
அண்ணாமலை பல்கலைக்கழக நிதி நிலையை சரி செய்ய வேண்டும்: திருமாவளவன்
அரசுடமை ஆக்கிய நோக்கத்தின் அடிப்படையில் அண்ணாமலை பல்கலைக்கழக நிதி நிலையை சரி செய்ய வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு 25.9.2013 அன்று சட்டமன்றத்தில் தனியாக சட்டம் நிறைவேற்றி அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்கிற நோக்கில் அரசுடைமையாக்கியது.
பின்னர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நிர்வாக அதிகாரிகளாக நியமித்தது. அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஜனவரி 2012-லிருந்து வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வுத்தொகை, 2013-ம் ஆண்டிலிருந்து ஈட்டிய விடுப்புக்குரிய பணம், ஓய்வூதியதாரர்களுக்கான பயன்கள், ஆண்டுதோறும் வழங்கப்படும் பொங்கல் போனஸ் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஆசிரியர்களும், ஊழியர்களும் கடந்த 7 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அதற்கு தீர்வு காணாதது தமிழக அரசின் அலட்சியப் போக்கை வெளிப்படுத்துவதாக உள்ளது.
தமிழக அரசின் இந்த அலட்சியப்போக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசு உடமையாக்கியதின் நோக்கத்தை சீர்குலைப்பதாக உள்ளது.
தமிழகத்தில் அரும்பெரும் தலைவர்கள் உருவாக்கிய அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஊழியர்கள் தங்களின் டிசம்பர் மாத சம்பளத்தை உடனே வழங்கக்கோரியும் மற்றும் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கடந்த 7 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இதுவரை தமிழக அரசு இப்போராட்டத்தை கண்டும், காணாமல் இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் வேதனையை அளிக்கிறது.
டிசம்பர் மாத சம்பளம் கூட வழங்காததால் ஊழியர்களின் குடும்பத்தினரும் பெரும் கவலைக்குள்ளாகி இருக்கிறார்கள். புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா கொண்டாட இயலாத நிலை உருவாகியுள்ளது. ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளையும் போராட்டத்தையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கிறது.
எனவே, தமிழக முதல்வர் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு தீர்வு காண உடனே தலையிட வேண்டும் என்றும், ஊழியர்களுக்கு டிசம்பர் மாத சம்பளத்தை வழங்க வேண்டும்.
அவர்களது அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்றும், அரசுடைமையாக்கியதின் நோக்கத்தை நிறைவேற்றுகிற வகையில் பல்கலைக் கழகத்தின் கடனை ஏற்றுக் கொண்டு மோசமான நிதி நிலையைச் சரிசெய்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை வலிமைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு 25.9.2013 அன்று சட்டமன்றத்தில் தனியாக சட்டம் நிறைவேற்றி அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்கிற நோக்கில் அரசுடைமையாக்கியது.
பின்னர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நிர்வாக அதிகாரிகளாக நியமித்தது. அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஜனவரி 2012-லிருந்து வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வுத்தொகை, 2013-ம் ஆண்டிலிருந்து ஈட்டிய விடுப்புக்குரிய பணம், ஓய்வூதியதாரர்களுக்கான பயன்கள், ஆண்டுதோறும் வழங்கப்படும் பொங்கல் போனஸ் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஆசிரியர்களும், ஊழியர்களும் கடந்த 7 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அதற்கு தீர்வு காணாதது தமிழக அரசின் அலட்சியப் போக்கை வெளிப்படுத்துவதாக உள்ளது.
தமிழக அரசின் இந்த அலட்சியப்போக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசு உடமையாக்கியதின் நோக்கத்தை சீர்குலைப்பதாக உள்ளது.
தமிழகத்தில் அரும்பெரும் தலைவர்கள் உருவாக்கிய அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஊழியர்கள் தங்களின் டிசம்பர் மாத சம்பளத்தை உடனே வழங்கக்கோரியும் மற்றும் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கடந்த 7 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இதுவரை தமிழக அரசு இப்போராட்டத்தை கண்டும், காணாமல் இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் வேதனையை அளிக்கிறது.
டிசம்பர் மாத சம்பளம் கூட வழங்காததால் ஊழியர்களின் குடும்பத்தினரும் பெரும் கவலைக்குள்ளாகி இருக்கிறார்கள். புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா கொண்டாட இயலாத நிலை உருவாகியுள்ளது. ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளையும் போராட்டத்தையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கிறது.
எனவே, தமிழக முதல்வர் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு தீர்வு காண உடனே தலையிட வேண்டும் என்றும், ஊழியர்களுக்கு டிசம்பர் மாத சம்பளத்தை வழங்க வேண்டும்.
அவர்களது அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்றும், அரசுடைமையாக்கியதின் நோக்கத்தை நிறைவேற்றுகிற வகையில் பல்கலைக் கழகத்தின் கடனை ஏற்றுக் கொண்டு மோசமான நிதி நிலையைச் சரிசெய்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை வலிமைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.