செய்திகள்

போலீசாரின் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2017-01-07 22:39 IST   |   Update On 2017-01-07 22:39:00 IST
மோட்டார் சைக்கிள் பயணத்தின் போது ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
காரைக்குடி:

மோட்டார் சைக்கிள் பயணத்தின் போது ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து போலீசார் சார்பில் காரைக்குடியில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலத்தை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினம் தொடங்கி வைத்தார். ஊர்வலம் காரைக்குடி பெரியார் சிலையில் இருந்து தொடங்கி அண்ணாசிலை, பழைய பஸ் நிலையம், வ.உ.சி. சாலை, கழனிவாசல், வாட்டர் டேங்க், வருமான வரித்துறை அலுவலக சாலை, ராஜீவ்காந்தி சாலை, புதிய கோர்ட்டு வழியாக புதிய பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.

ஊர்வலத்தில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் அகிலன், ரமேஷ்கண்ணன், சாலை பாதுகாப்பு படை ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் மணிமாறன் மற்றும் எஸ்.எம்.எஸ்.வி. மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், நித்யா மோட்டார்ஸ் ஊழியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Similar News