செய்திகள்

பட்டுக்கோட்டை அருகே மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்து ஊழியர் பலி

Published On 2016-12-30 10:14 GMT   |   Update On 2016-12-30 10:14 GMT
பட்டுக்கோட்டை அருகே மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்து ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலத்தூரில் உள்ள மின்சார வாரியத்தில் லைன் மேனாக பணியாற்றி வந்தவர் பாஸ்கரன் (வயது 50). சம்பவத்தன்று ஆலத்தூர் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மின் கம்பத்தில் வேலையை முடித்துவிட்டு இறங்கும் போது தவறி விழுந்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரும் வழியிலேயே இறந்துவிட்டார். பின்னர் அரசு மருத்துவமனையில் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பட்டுக்கோட்டை தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர்.

Similar News