செய்திகள்

தாம்பரத்தில் ஆதார் எண் மூலம் கோவிலில் காணிக்கை

Published On 2016-12-30 08:39 GMT   |   Update On 2016-12-30 09:46 GMT
பணமில்லா பரிவர்த்தனை என்பதை மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் ஆதார் எண்மூலம் காணிக்கை செலுத்தும் வசதி தாம்பரத்தில் அறிமுகம் ஆகி உள்ளது.
சென்னை:

தாம்பரத்தை அடுத்த சானடோரியத்தில் லட்சுமி விநாயகர் ஆலயம் உள்ளது. எல்லா கோவில்களைப் போலவே இந்த கோவிலிலும் பக்தர்கள் காணிக்கை செலுத்த உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது. அனுமன் ஜெயந்தியான நேற்று பிரதமர் மோடி பெயரில் விசே‌ஷஅர்ச்சனை செய்யப்பட்டது. உயர் மதிப்பு ரூபாய் நோட்டு ஒழிக்கப்பட்டதால் தனது உயிருக்கு ஆபத்து என்று மோடி கூறியதால் அவருக்கு தீங்கு நேராமல் இருக்க கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுப்பட்டனர்.

அதை தொடர்ந்து ஆதார் எண் மூலம் காணிக்கை செலுத்தும் வசதியை பா.ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பக்தர்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கும் ரேகை பதிவு எந்திரத்தில் கைவிரல் ரேகை வைத்ததும் கோவிலில் உள்ள மொபைல் போனில் வங்கி கணக்கு விபரங்கள் வரும். பக்தர் கொடுக்க வேண்டிய காணிக்கையை தெரிவித்தால் போதும். உடனே கோவில் கணக்கில் சேர்ந்து விடும்.

இதன் மூலம் ரசீது போடும் வேலை, வங்கிக்கு செல்லும் வேலை இல்லை. உண்டியலையும் அகற்றி விட்டனர். உண்டியல் பாதுகாப்பு பற்றிய பயமும் தேவையில்லை.

இந்த வசதியை மற்ற கோவில்களிலும் பின்பற்ற வழிப்புணர்வு ஏற்படுத்தப் போவதாக செம்பாக்கம் வேத சுப்பிரமணியன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கோவில் தலைவர் சுப்பராயன், நிர்வாகி பாபுராஜ், பா.ஜனதா நிர்வாகிகள் சுரேஷ்குமார், மகேஷ்குமார், டாக்டர் கோபி அய்யாசாமி, நமோபிரேம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News