செய்திகள்
மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதல்: 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பலி
கல்லல் அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பத்தூர்:
கல்லல் அருகே உள்ள பிலார் என்ற ஊரை சேர்ந்தவர் அய்யாகண்ணு மகன் வடிவேல்(வயது 28). இவர் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று முன்தினம் இரவு பணிக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். பின்னர் பணி முடிந்து நேற்று மதியம், தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். திருப்பத்தூரை அடுத்த கண்டரமாணிக்கம் சாலையில் உள்ள ஆத்தங்கரைபட்டி என்ற விலக்கு பகுதியில் வடிவேல் சென்றபோது, எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதிவிட்டார். இதில் நிலை தடுமாறிய அவர், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோஷ்டியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வடிவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்துபோன வடிவேல், சிறந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவருக்கான தமிழக அரசின் சான்றிதழ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லல் அருகே உள்ள பிலார் என்ற ஊரை சேர்ந்தவர் அய்யாகண்ணு மகன் வடிவேல்(வயது 28). இவர் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று முன்தினம் இரவு பணிக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். பின்னர் பணி முடிந்து நேற்று மதியம், தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். திருப்பத்தூரை அடுத்த கண்டரமாணிக்கம் சாலையில் உள்ள ஆத்தங்கரைபட்டி என்ற விலக்கு பகுதியில் வடிவேல் சென்றபோது, எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதிவிட்டார். இதில் நிலை தடுமாறிய அவர், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோஷ்டியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வடிவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்துபோன வடிவேல், சிறந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவருக்கான தமிழக அரசின் சான்றிதழ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.