செய்திகள்
காரைக்குடியில் 1,782 புதுப்பட சி.டி.க்கள் பறிமுதல்: 2 பேர் கைது
காரைக்குடியில் புதுப்பட சி.டி.க்களை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,782 புதுப்பட சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
காரைக்குடி:
காரைக்குடியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 34). இவர் பர்மா காலனி தண்ணீர் தொட்டி, முதல் பிட் ஆகிய பகுதிகளில் சி.டி. கடை நடத்தி வருகிறார்.
இவரது கடையில் அனுமதியின்றி புதுப்பட சி.டி.க்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி வடக்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் மற்றும் போலீசார் அருண்குமாரின் 2 கடைகளிலும் சோதனை நடத்தினர்.
அப்போது அனுமதியின்றி விற்பனைக்கு இருந்த பழைய, புதுப்பட சி.டி.க்கள் 1,782-ஐ பறிமுதல் செய்து அருண்குமாரை கைது போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் காரைக்குடி முதல் பிட் பகுதியில் குமரன் என்பவரின் கடையில் இருந்த 82 புதுப்பட சி.டி.க்களை தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளைய ராஜா பறிமுதல் செய்து குமரனை கைது செய்தார்.