செய்திகள்
வாலிபர் கொலை: 2 பேருக்கு ஆயுள் தண்டனை
திருப்பத்தூர் அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள நரியனேரி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன், விவசாயி. இவரது பக்கத்து நிலத்தை சேர்ந்தவர் அர்ஜுனன். இவர்கள் 2 பேரும் உறவினர்கள். தென்னைமரத்தை வெட்டியது தொடர்பாக முருகேசனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 18-3-2008 அன்று ஏற்பட்ட தகராறில் முருகேசனை அர்ஜுனன் தரப்பினர் அடித்து உதைத்தனர். அதனை தட்டி கேட்க சென்ற முருகேசன் தரப்பினர் சுகுணா, ஆறுமுகம் உள்ளிட்டவர்களையும் தாக்கினர்.
மறுநாள் 19-3-2008 அன்று முருகேசனின் ஆதரவாளரான அதே பகுதியை சேர்ந்த காந்தி என்ற மணியை (வயது 23) நரியனேரி பெருமாளப்பன் கோவில் அருகில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அர்ஜுனன் தரப்பினர் வெட்டி கொலை செய்தனர்.
இந்த கொலை வழக்கில் அர்ஜுனன், ஜெயராமன், ராஜகோபால், திருப்பதி, குப்பம்மாள், தனலட்சுமி, தெய்வானை ஆகிய 7 பேர் மீது கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். இதில் ஜாமீனில் வெளியே வந்த அர்ஜுனன், குப்பம்மாள், தெய்வானை ஆகிய 3 பேரும் சில மாதங்களிலேயே திருப்பத்தூரில் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் காந்தி கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு திருப்பத்தூரில் உள்ள 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது.
நேற்று இந்த வழக்கை நீதிபதி ஏ.முருகன் விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட ஜெயராமன் (42), ராஜகோபால் (65) ஆகிய 2 பேருக்கு ஆயுள் தண்டனையும், திருப்பதிக்கு (31) 2 ஆண்டு சிறை தண்டனையும், தனலட்சுமிக்கு ஒரு ஆண்டு மற்றும் 3 மாத சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.
திருப்பத்தூர் அருகே உள்ள நரியனேரி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன், விவசாயி. இவரது பக்கத்து நிலத்தை சேர்ந்தவர் அர்ஜுனன். இவர்கள் 2 பேரும் உறவினர்கள். தென்னைமரத்தை வெட்டியது தொடர்பாக முருகேசனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 18-3-2008 அன்று ஏற்பட்ட தகராறில் முருகேசனை அர்ஜுனன் தரப்பினர் அடித்து உதைத்தனர். அதனை தட்டி கேட்க சென்ற முருகேசன் தரப்பினர் சுகுணா, ஆறுமுகம் உள்ளிட்டவர்களையும் தாக்கினர்.
மறுநாள் 19-3-2008 அன்று முருகேசனின் ஆதரவாளரான அதே பகுதியை சேர்ந்த காந்தி என்ற மணியை (வயது 23) நரியனேரி பெருமாளப்பன் கோவில் அருகில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அர்ஜுனன் தரப்பினர் வெட்டி கொலை செய்தனர்.
இந்த கொலை வழக்கில் அர்ஜுனன், ஜெயராமன், ராஜகோபால், திருப்பதி, குப்பம்மாள், தனலட்சுமி, தெய்வானை ஆகிய 7 பேர் மீது கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். இதில் ஜாமீனில் வெளியே வந்த அர்ஜுனன், குப்பம்மாள், தெய்வானை ஆகிய 3 பேரும் சில மாதங்களிலேயே திருப்பத்தூரில் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் காந்தி கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு திருப்பத்தூரில் உள்ள 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது.
நேற்று இந்த வழக்கை நீதிபதி ஏ.முருகன் விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட ஜெயராமன் (42), ராஜகோபால் (65) ஆகிய 2 பேருக்கு ஆயுள் தண்டனையும், திருப்பதிக்கு (31) 2 ஆண்டு சிறை தண்டனையும், தனலட்சுமிக்கு ஒரு ஆண்டு மற்றும் 3 மாத சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.