செய்திகள்
காரைக்குடியில் ஏ.டி.எம்.-க்கு சென்ற இளம்பெண் மாயம்
காரைக்குடியில் பணம் எடுக்க ஏ.டி.எம்-க்கு சென்ற இளம்பெண் மாயமானார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார்.
காரைக்குடி:
காரைக்குடி மகர் நோன்பு பொட்டல் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் முத்துலட்சுமி (வயது 24). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் நேற்று அருகில் உள்ள ஏ.டி.எம்.-க்கு சென்று பணம் எடுத்துவருவதாக கூறி விட்டு வெளியே சென்றார்.
நீண்ட நேரமாகியும் முத்து லட்சுமி வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமடைந்த பாலகிருஷ்ணன் தனது மகளை தோழிகள், உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தார். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவர் காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து முத்துலட்சுமியை தேடி வருகிறார்.