செய்திகள்

சிவகங்கையில் நர்சு திடீர் மாயம்

Published On 2016-12-18 17:07 IST   |   Update On 2016-12-18 17:07:00 IST
தனியார் மருத்துவ மனையில் வேலை பார்த்த நர்சு திடீரென மாயமானார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

சிவகங்கை:

சிவகங்கை நகர் போஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் காதுன் ‌ஷரீபா (வயது 45). இவரது மகள் ஹபீபா செல்வா (19). நர்சிங் பயிற்சி முடித்துள்ள இவர், சிவகங்கையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.

கடந்த 13-ந்தேதி வீட்டில் இருந்து அவர் வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

உறவினர் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் ஹபீபா செல்வா குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த காதுன் ‌ஷரீபா, சிவகங்கை நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து, மாயமான ஹபீபா செல்வாவை தேடி வருகிறார்.

Similar News