செய்திகள்

மயிலாடுதுறையில் லாரி டிரைவரை தாக்கிய இன்ஸ்பெக்டர்

Published On 2016-12-17 23:06 IST   |   Update On 2016-12-17 23:06:00 IST
மயிலாடுதுறையில் வாகன சோதனையில் ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவரை இன்ஸ்பெக்டர் தாக்கி உள்ளார். இதில் காயம் அடைந்த டிரைவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தரங்கம்பாடி:

கரூர் பகுதியை சேர்ந்த ரெத்தினம் மகன் சக்திவேல் (வயது 41) லாரி டிரைவர். இவரும் அதேபகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் (வயது 39) என்பவரும் கல் லோடு ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறை வந்தனர்.

அப்போது மயிலாடுதுறை மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் ஜெயபால் லாரியை நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெயபால், சக்திவேல், சுந்தர்ராஜ் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த 2 பேரும் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் மகாதேவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News