செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்: பி.எஸ்.என்.எல். ஊழியர்-வாலிபர் பலி

Published On 2016-12-16 15:11 IST   |   Update On 2016-12-16 15:11:00 IST
இரும்புலியூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் பி.எஸ்.என்.எஸ். ஊழியர், வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தாம்பரம்:

சிவகாசியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 42). பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

சென்னை வந்த அவர் பெருங்களத்தூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த உறவினர் பாண்டியராஜனுடன் (25) அறையில் தங்கி இருந்தார்.

இன்று காலை முத்துராமலிங்கம் சிவகாசி செல்ல முடிவு செய்தார். அவரை தாம்பரத்தில் ரெயில் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் பாண்டியராஜன் அழைத்து சென்றார்.

இரும்புலியூர் அருகே சென்ற போது பின்னால் வந்த தனியார் கொரியர் வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் முன்னாள் சென்ற கல்லூரி பஸ் மீது பயங்கரமாக மோதியது. பஸ்-வேனின் இடையில் சிக்கிய முத்து ராமலிங்கமும், பாண்டியராஜனும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து தாம்பரம் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News