செய்திகள்
சத்தி வனப்பகுதியில் தந்தத்தால் யானை குத்தியதில் சுற்றுலா பயணி குடல் சரிந்தது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் சுற்றுலா சென்ற பயணி ஒருவர் யானை தாக்கி படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சத்தியமங்கலம்:
மதுரையை சேர்ந்த நண்பர்கள் சிலர் ஈரோடு மாவட்டத்துக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் சத்தியமங்கலம் வனப்பகுதியில் சுற்றுலா சென்று பல்வேறு இடங்களை பார்வையிட்டனர். பிறகு ஆசனூர் அருகே உள்ள அரேப்பாளையத்தில் உள்ள ‘‘கே.ஏ.எஸ். பார்ம்’’ என்ற ஒரு தங்கும் விடுதியில் அவர்கள் தங்கினர்.
சுற்றுலா பயணிகளில் ஒருவரான ஷியாம்குமார் (வயது 45) என்பவர் இன்று அதிகாலை அறையை திறந்து வெளியே வந்து இயற்கை உபாதை கழிக்க அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார்.
அப்போது அங்கு புதர் பகுதியில் இருந்த ஒரு ஆண் யானை அவரை தாக்கியது. தனது தந்தங்களால் அவரின் வயிற்றில் குத்தியது. இதில் குடல் சரிந்த நிலையில் அவர் கீழே விழுந்தார்.
அவர் போட்ட அபாய குரலை கேட்டு நண்பர்கள் மற்றும் அந்த பகுதி உள்ள மக்கள் திரண்டு சென்றனர். அவர் அருகில் நின்று கொண்டிருந்த யானையை சத்தம் போட்டு விரட்டியடித்தனர். பிறகு குடல் சரிந்த நிலையில் கிடந்த ஷியாம்குமாரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக அவர் கோவை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கபட்டனர்.
மதுரையை சேர்ந்த நண்பர்கள் சிலர் ஈரோடு மாவட்டத்துக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் சத்தியமங்கலம் வனப்பகுதியில் சுற்றுலா சென்று பல்வேறு இடங்களை பார்வையிட்டனர். பிறகு ஆசனூர் அருகே உள்ள அரேப்பாளையத்தில் உள்ள ‘‘கே.ஏ.எஸ். பார்ம்’’ என்ற ஒரு தங்கும் விடுதியில் அவர்கள் தங்கினர்.
சுற்றுலா பயணிகளில் ஒருவரான ஷியாம்குமார் (வயது 45) என்பவர் இன்று அதிகாலை அறையை திறந்து வெளியே வந்து இயற்கை உபாதை கழிக்க அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார்.
அப்போது அங்கு புதர் பகுதியில் இருந்த ஒரு ஆண் யானை அவரை தாக்கியது. தனது தந்தங்களால் அவரின் வயிற்றில் குத்தியது. இதில் குடல் சரிந்த நிலையில் அவர் கீழே விழுந்தார்.
அவர் போட்ட அபாய குரலை கேட்டு நண்பர்கள் மற்றும் அந்த பகுதி உள்ள மக்கள் திரண்டு சென்றனர். அவர் அருகில் நின்று கொண்டிருந்த யானையை சத்தம் போட்டு விரட்டியடித்தனர். பிறகு குடல் சரிந்த நிலையில் கிடந்த ஷியாம்குமாரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக அவர் கோவை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கபட்டனர்.