செய்திகள்
கேளம்பாக்கம் அருகே ஜெயலலிதா சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்றவர் விபத்தில் பலி
கேளம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பைக் மோதிய விபத்தில் அதிமுக தொண்டர் பலியானர்.
திருப்போரூர்:
திருப்போரூர் அருகே உள்ள வளவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் மாரிமுத்து (வயது 37). அ.தி.மு.க. தொண்டர்.
இவர் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்து வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தி விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கேளம்பாக்கம் அருகே வந்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், மாரி முத்து பைக் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி மாரிமுத்து விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து இறந்தார்.
பலியான மாரிமுத்து குடும்பத்திற்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆறுதல் கூறினர்.
திருப்போரூர் அருகே உள்ள வளவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் மாரிமுத்து (வயது 37). அ.தி.மு.க. தொண்டர்.
இவர் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்து வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தி விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கேளம்பாக்கம் அருகே வந்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், மாரி முத்து பைக் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி மாரிமுத்து விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து இறந்தார்.
பலியான மாரிமுத்து குடும்பத்திற்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆறுதல் கூறினர்.