செய்திகள்

சென்னிமலையில் திருமணம் செய்த காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

Published On 2016-12-10 16:16 IST   |   Update On 2016-12-10 16:17:00 IST
சென்னிமலையில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

சென்னிமலை:

தருமபுரி மாவட்டம், மேதூர் பகுதியினை சேர்ந்தவர் மினியப்பன் இரவது மனைவி பாஞ்சாலி. இவர்களது மகள் ஜோதி (வயது 20).

கட்டிட தொழிலாளியான மினியப்பன் கடந்த சில வருடங்களாக பெருந்துறை டவுன் அய்யப்பா நகரில் தங்கி வேலைக்கு சென்று வருகிறார். மகள் ஜோதி 10-வது படித்து விட்டு பெருந்துறையில் ஒரு துணிக்கடையில் பணியாற்றி வருகிறார்.

மேலும் இவர் பெருந்துறையில் உள்ள டுட்டோரியல் கல்லூரியில் படித்து வருகிறார்.

சென்னிமலை அடுத்துள்ள மேலப் பாளையம் சர்கார் கிணறு வீதியில் வசிப்பவர் செல்வராஜ் மகேஸ்வரி தம்பதியினர். இவர்களது மகன் குணசேகரன் ( 23). ஜோதி படித்த டுட்டோரியல் கல்லூரியில் இவரும் படித்து வந்தார். அப்போது இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.

5 வருடமாக காதலித்து வந்தது அவர்களின் பெற்றோருக்கு தெரியவந்தது அவர்கள் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து ஜோதி- குணசேகரன் சென்னிமலை முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இதன்பிறகு பாதுகாப்பு கேட்டு சென்னிமலை போலீசில் தஞ்சமடைந்தனர். இருவர் வீட்டிலும் பெற்றோர்களை வரவழைத்து போலீஸ் அறிவுரை கூறி சமாதானம் செய்து அனுப்பினர். பின்பு குணசேகரன் குடும்பத்தினர் வந்து மருமகளை ஏற்று கொண்டு வீட்டு அழைத்து சென்றனர்.

Similar News