செய்திகள்

ஆதம்பாக்கத்தில் கடன் தொல்லையால் பெண் தற்கொலை

Published On 2016-12-10 15:20 IST   |   Update On 2016-12-10 15:21:00 IST
ஆதம்பாக்கத்தில் கடன் தொல்லையால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலந்தூர்:

ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் துரை. இவரது மனைவி பத்மாவதி. இவர்கள் இதே பகுதியில் புதியதாக வீடு கட்டி உள்ளனர். அதற்காக நிறைய பேரிடம் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் மனம் உடைந்த பத்மாவதி நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News