செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் மர்ம சூட்கேசால் பரபரப்பு
சென்னை விமான நிலையத்தில் மர்ம சூட்கேஸ் ஒன்று சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக யாரும் எடுக்காததால் பரபரப்பு நிலவியது.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதி 3-வது நுழைவு வாயிலில் இன்று காலையில் ஒரு சூட்கேஸ், ஒரு பை ஆகியவை அனாதையாக கிடந்தது. சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக அதை யாரும் எடுக்காததால் பரபரப்பு நிலவியது. இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தி மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தனர். பின்னர் அதை திறந்து பார்த்தபோது துணி மணிகள், சாக்லெட், பிஸ்கட், ஊறுகாய் போன்றவை இருந்தது. இதனால் பரபரப்பு அடங்கியது.
சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதி 3-வது நுழைவு வாயிலில் இன்று காலையில் ஒரு சூட்கேஸ், ஒரு பை ஆகியவை அனாதையாக கிடந்தது. சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக அதை யாரும் எடுக்காததால் பரபரப்பு நிலவியது. இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தி மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தனர். பின்னர் அதை திறந்து பார்த்தபோது துணி மணிகள், சாக்லெட், பிஸ்கட், ஊறுகாய் போன்றவை இருந்தது. இதனால் பரபரப்பு அடங்கியது.