செய்திகள்

மணகோலத்தில் வந்து அஞ்சலி செலுத்திய அ.தி.மு.க. நிர்வாகி

Published On 2016-12-09 12:45 IST   |   Update On 2016-12-09 12:45:00 IST
தண்டலம் அ.தி.மு.க. கிளை கழக அவைத் தலைவர் கார்த்திக் இன்று காலை திருமணம் முடிந்தவுடன் தனது மனைவியுடன் ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.
ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் அ.தி.மு.க. கிளை கழக அவைத் தலைவர் கார்த்திக்- ஸ்நேகா திருமணம் இன்று காலை பெசன்ட் நகரில் நடந்தது. திருமணம் முடிந்தவுடன் கார்த்திக் தனது மனைவியுடன் ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.

இதுபற்றி கார்த்திக் கூறுகையில், “நான் திருமணம் முடிந்தவுடன் முதல்-அமைச்சர் அம்மாவை சந்தித்து ஆசி பெற வேண்டும் என்று நினைத்து இருந்தேன். ஆனால் அம்மா திடீரென்று மறைந்ததால் மிகவும் கவலை அடைந்தேன். இன்று காலை திருமணம் முடிந்தவுடன் நேராக ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி அம்மாவிடம் ஆசி பெற்றோம் என்றார்.

Similar News