செய்திகள்

காஞ்சீபுரத்தில் ஜெயலலிதா படத்துக்கு மாவட்ட கலெக்டர் அஞ்சலி

Published On 2016-12-08 22:57 IST   |   Update On 2016-12-08 22:57:00 IST
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவ படத்துக்கு மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவ படத்துக்கு மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் சவுரிராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பர்கத்பேகம் மற்றும் அரசு அலுவலர்கள் ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதா மறைவையொட்டி 7 நாட்கள் அரசுமுறை துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதையொட்டி காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகியவற்றில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு இருந்தது.

Similar News