செய்திகள்

பத்திரிக்கையாளர் சோ ராமசாமி காலமானார்

Published On 2016-12-07 00:25 GMT   |   Update On 2016-12-07 06:19 GMT
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பத்திரிக்கை ஆசிரியர் சோ ராமசாமி இன்று காலமானார்.
சென்னை:

துக்ளக் இதழின் ஆசிரியரும், நடிகரும், பிரபல எழுத்தாளருமான சோ ராமசாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் சோ ராமசாமியின் உயிர் சிகிச்சை பலனின்றி இன்று பிரிந்தது. அவருக்கு வயது 82. அதிகாலை 4.40 மணிக்கு சோ உயிர் பிரிந்ததாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சோ காலமானதை அவரது மருத்துவர் விஜய்சங்கர் உறுதி செய்துள்ளார். முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்து இரண்டு நாட்கள் முழுமையாக முடிவதற்குள் சோ ராமசாமி உயிரிழந்துள்ளார்.

ஜெயலலிதாவும், சோ ராமசாமி நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். அரசியலில் ஜெயலலிதாவுக்கு சோ ராமசாமி ஒரு சிறந்த ஆலோசகாக இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News