செய்திகள்
நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: நாகை துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு

Published On 2016-11-30 09:51 IST   |   Update On 2016-11-30 09:52:00 IST
வங்க கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக நாகையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
கீழ்வேளூர்:

வங்க கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக நாகையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

சென்னைக்கு தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று புயலாக மாறும்.

இந்த புயல் வருகிற 2-ந் தேதி சென்னை-வேதாரண்யம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. கடலுக்கு சென்ற மீனவர்களும் கரைக்கு திரும்பி வருகிறார்கள்.

Similar News