செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் லாரி கடத்தல்

Published On 2016-11-27 17:02 GMT   |   Update On 2016-11-27 17:02 GMT
ஜெயங்கொண்டத்தில் லாரியை மர்ம நபர்கள் கடத்தி சென்றதால் இது குறித்து லாரி டிரைவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடாலி கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன், லாரி டிரைவர். இவர் ராங்கியம் கிராமத்தை சேர்ந்த கருணாகரன் என்பவருக்கு சொந்தமான லாரியில் கடந்த ஒரு மாதமாக டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று, இவர் லாரியில்  சென்னையில் இருந்து அரிசிலோடு ஏற்றி வந்து, ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் கடையில் இறக்கிவிட்டு, கடைவீதியில் லாரியை நிறுத்தினால் பொதுமக்களுக்கு   இடையூறாக இருக்கும் என்பதால், லாரியை விருத்தாசலம் சாலையில் உள்ள வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் லாரியை நிறுத்திவிட்டு, வசூல் செய்த வாடகை பணத்தை வங்கி கணக்கில் செலுத்திவிட்டு திரும்பி லாரியை எடுப்பதற்காக சென்றார், அப்போது அவர் நிறுத்திய இடத்தில் லாரியை காணவில்லை.

இதனால் அதிர்ச்சி யடைந்த அவர் அருகில் உள்ளவர்கள் மற்றும் கடைகளில்  விசாரித்தும்,  எந்த தகவலும் கிடைக்காததால், அவர் ஜெயங்கொண்டம் போலீசில் புகார் அளித்தார்.

இளங்கோவன் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து  அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர்.  இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாரும் உஷார் படுத்தப்பட்டு, மாயமான லாரியை தேடி வருகின்றனர்.

Similar News