செய்திகள்

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொது மக்கள் முற்றுகை

Published On 2016-11-25 10:02 GMT   |   Update On 2016-11-25 10:02 GMT
100 நாள் திட்டத்தில் வேலை வழங்க கோரி பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தை அடுத்த புத்தேரி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை வழங்குவது இல்லை என்று தெரிகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டும் உரிய பதில் கிடைக்க வில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, 100 நாள் வேலை எங்களுக்கு வழங்குவது இல்லை. எங்கள் கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கு 20 நாட்கள் மட்டுமே வேலை வழங்கியுள்ளனர். அதற்கான கூலியும் வழங்கவில்லை.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. எனவே எங்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என்றனர்.

Similar News