செய்திகள்

ராஜபாளையத்தில் இளம்பெண்ணை மிரட்டி 3 பவுன் நகை பறிப்பு

Published On 2016-11-24 17:21 IST   |   Update On 2016-11-24 17:21:00 IST
ராஜபாளையத்தில் இளம்பெண்ணை மிரட்டி நகை பறித்த 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

ராஜபாளையம்:

ராஜபாளையம் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மகள் மகேசுவரி (வயது24). இவர், தென்காசி ரோட்டில் இளம்தோப்பு விலக்கு பகுதியில் உறவினர் ரமேசுடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள், மகேசுவரியை மிரட்டி அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டனர்.

இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் மகேசுவரி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகை பறித்த 3 பேரை தேடி வருகிறார்.

Similar News