செய்திகள்

மதனுக்கு பெண்களுடன் தொடர்பு இல்லை: தாய்-மனைவி பேட்டி

Published On 2016-11-24 09:55 GMT   |   Update On 2016-11-24 09:55 GMT
மதனின் தாய் தங்கம், 2-வது மனைவி சுமலதா ஆகியோர் இன்று சென்னையில் திடீரென பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: மதனுக்கு பெண்களுடன் தொடர்பு இல்லை என்று கூறினர்.

மதனின் தாய் தங்கம், 2-வது மனைவி சுமலதா ஆகியோர் இன்று சென்னையில் திடீரென பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் மதன் பற்றி வெளியாகும் தகவல் அனைத்தும் கவலை அளிப்பதாக கூறி கண்ணீர் வடித்தனர்.

தாய் தங்கம் கூறும்போது, எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்திற்கு கமி‌ஷன் அடிப்படையிலேயே மாணவர்களை மதன் சேர்த்து விட்டார். பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மதனை சிக்க வைத்து விட்டனர்.

எனது மகன் மகனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறுகிறார்கள். முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுமலதாவை 2-வது திருமணம் செய்து கொண்டு அவருடன்தான் மதன் வாழ்ந்து வந்தார். வேறு யாருடனும் மதன் தொடர்பில் இல்லை என்றார்.

மனைவி சுமலதா கூறும் போது, திருப்பூர் வர்ஷா எனது உறவுக்கார பெண் தான். அவரது வீட்டில் எனது கணவர் மதன் இருந்தது எங்களுக்கு தெரியாது. இந்த வி‌ஷயத்தில் சட்டம் தன் கடமையை செய்யட்டும். எனது கணவரே தவறு செய் திருந்தாலும் தவறுதான் என்றார்.

Similar News