செய்திகள்
மயிலாடுதுறை அருகே கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை
மயிலாடுதுறை அருகே கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே கோழிகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் சகாயசபரிநாதன் (வயது 39). இவருடைய மனைவி லதா (32).
கணவன்-மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த இருவரும் சம்பவத்தன்று மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்த லதா திடீரென்று இறந்து விட்டார்.
மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சகாய சபரிநாதனும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.