செய்திகள்
தூத்துக்குடியில் திருமண ஆசை காட்டி இளம்பெண் கற்பழிப்பு - மாணவர் கைது
தூத்துக்குடியில் திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை கற்பழித்த பாலிடெக்னிக் மாணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கயல்விழி (வயது20). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் தூத்துக்குடி கோரம்பள்ளத்தை சேர்ந்த சண்முகவேல் மகன் பாலிடெக்னிக் மாணவரான பாலஜெகன் (19) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த சில மாதங்களாக ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலஜெகன், கயல்விழியிடம் திருமண ஆசை காட்டி அவரிடம் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கயல்விழி தனது காதலன் பாலஜெகனிடம் என்னை எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்? என்று கேட்டார். அப்போது பாலஜெகன் நான் உன்னை திருமணம் செய்யமாட்டேன் என கூறினாராம்.
இதனால் அதிர்ச்சியடைந்த கயல்விழி புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை கற்பழித்த பாலஜெகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கயல்விழி (வயது20). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் தூத்துக்குடி கோரம்பள்ளத்தை சேர்ந்த சண்முகவேல் மகன் பாலிடெக்னிக் மாணவரான பாலஜெகன் (19) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த சில மாதங்களாக ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலஜெகன், கயல்விழியிடம் திருமண ஆசை காட்டி அவரிடம் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கயல்விழி தனது காதலன் பாலஜெகனிடம் என்னை எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்? என்று கேட்டார். அப்போது பாலஜெகன் நான் உன்னை திருமணம் செய்யமாட்டேன் என கூறினாராம்.
இதனால் அதிர்ச்சியடைந்த கயல்விழி புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை கற்பழித்த பாலஜெகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.