செய்திகள்

ஸ்ரீபெரும்புதூரில் மர்ம காய்ச்சலுக்கு 9 வயது சிறுவன் பலி

Published On 2016-11-15 14:51 IST   |   Update On 2016-11-15 14:51:00 IST
ஸ்ரீபெரும்புதூரில் மர்ம காய்ச்சலுக்கு 9 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மணிமங்கலம் பெரியார் காலனி விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி நளினி. இவர்களது மகன் சாருபிரியன் (வயது9). 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த வாரம் புதன்கிழமை சாருபிரியனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவனுக்கு காய்ச்சல் குறையாததால் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சாருபிரியன் நேற்று இரவு இறந்தான்.

மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலியானதால் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.

Similar News