செய்திகள்

குடும்ப தகராறில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

Published On 2016-11-10 20:43 IST   |   Update On 2016-11-10 20:43:00 IST
அரியலூர் அருகே குடும்ப தகராறில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர்:

அரியலூர் அருகே உள்ள குருவாளி பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 34) மது குடிக்கும் பழக்கம் உடையவர். இதனால் இவருக்கும் இவரது மனைவி ரஞ்சிதாவிற்கும் தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரவிச்சந்திரன் குடும்பம் நடத்த வருமாறு ரஞ்சிதாவை அழைத்துள்ளார். இதற்கு அவர் மறுக்கவே மனமுடைந்த ரவிச்சந்திரன் விஷம் குடித்து தாலுக்கா அலுவலகம் முன்பு மயங்கி கிடந்தார்.

அவரை மீட்டு பொதுமக்கள் அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் பரிதாபமாக உயரிழந்தார்.  இது குறித்து அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News