செய்திகள்
மயிலாடுதுறை அருகே மாணவி பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது
மயிலாடுதுறை அருகே வீட்டில் தனியாக இருந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே மாத்தூர் புத்திரம்திடல் பகுதியை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் திருக்கடையூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார்.
நேற்று அந்த மாணவிக்கு உடல்நிலை சரியில்லாததால் பள்ளிக்கு செல்லவில்லையாம். இதனால் அவர் வீட்டில் தனியாக இருந்தார். இதை நோட்டமிட்ட அதே பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி மகன் சந்திரபோஸ் (23) என்பவர் மாலையில் அவரது வீட்டிற்குள் புகுந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு ஓடிவிட்டாராம்.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவி பின்னர் வீடு திரும்பிய தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். அவர்கள் இதுபற்றி மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ராணி வழக்குப்பதிவு செய்து சந்திரபோசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.