செய்திகள்
புதுக்கோட்டையில் மாதாந்திர விளையாட்டு போட்டி 9-ந்தேதி நடக்கிறது
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அக்டோபர் மாத மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் 9.11.2016 அன்று புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்திடலில் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 2016-2017-ஆம் ஆண்டுக்கான அக்டோபர் மாத மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் 9.11.2016 அன்று புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்திடலில் தடகளம், கூடைப்பந்து (ஆடவர் மற்றும் மகளிர்) மற்றும் இறகுப்பந்து (ஆடவர் மற்றும் மகளிர்) விளையாட்டுகளில் கீழ்க்காணும் நிகழ்வுகளில் நடத்தப்படவுள்ளது.
100மீ, 400மீ 1500 மீ நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், (ஆடவர் மற்றும் மகளிர்) குண்டு எறிதல் மற்றும் தட்டு எறிதல்
1. கூடைப்பந்து (ஆடவர் மற்றும் மகளிர்)
2. இறகுப்பந்து (ஆடவர் மற்றும் மகளிர்)
போட்டிகளில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை.தடகளம் விளையாட்டுப் போட்டிகளில் ஒருவர் ஒரு விளையாட்டு நிகழ்வில் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
அக்டோபர் 2016-ஆம் மாத மாதாந்திர போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 9.11.2016 அன்று காலை 8.00 மணிக்கு விளையாட்டரங்கத்திற்கு வந்து, புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களிடம் தங்களது பெயரினை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேற்காணும் தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 2016-2017-ஆம் ஆண்டுக்கான அக்டோபர் மாத மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் 9.11.2016 அன்று புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்திடலில் தடகளம், கூடைப்பந்து (ஆடவர் மற்றும் மகளிர்) மற்றும் இறகுப்பந்து (ஆடவர் மற்றும் மகளிர்) விளையாட்டுகளில் கீழ்க்காணும் நிகழ்வுகளில் நடத்தப்படவுள்ளது.
100மீ, 400மீ 1500 மீ நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், (ஆடவர் மற்றும் மகளிர்) குண்டு எறிதல் மற்றும் தட்டு எறிதல்
1. கூடைப்பந்து (ஆடவர் மற்றும் மகளிர்)
2. இறகுப்பந்து (ஆடவர் மற்றும் மகளிர்)
போட்டிகளில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை.தடகளம் விளையாட்டுப் போட்டிகளில் ஒருவர் ஒரு விளையாட்டு நிகழ்வில் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
அக்டோபர் 2016-ஆம் மாத மாதாந்திர போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 9.11.2016 அன்று காலை 8.00 மணிக்கு விளையாட்டரங்கத்திற்கு வந்து, புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களிடம் தங்களது பெயரினை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேற்காணும் தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.