செய்திகள்

பல்லாவரத்தில் கடனை கேட்டு மிரட்டியதால் ரவுடியை வெட்டிய கும்பல்

Published On 2016-11-05 15:37 IST   |   Update On 2016-11-05 15:37:00 IST
பல்லாவரத்தில் கடனை கேட்டு மிரட்டியதால் ரவுடியை வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தாம்பரம்:

சென்னை குன்றத்தூர் சபாபதி நகரை சேர்ந்தவர் குருராஜ் என்கிற நந்த குமார் (33). இவர் மீது பல்லாவரம், குன்றத்தூர் போலீஸ் நிலையங்களில் ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் நந்த குமாரின் நண்பர் காஜா ரூ.1 லட்சம் பணத்தை மெர்வின் என்பவருக்கு கடனாக கொடுத்திருந்தார். அதற்கான வட்டியை மெர்லின் கட்டவில்லை. இதையடுத்து காஜா பணத்தை திருப்பி கேட்டார். அதையும் மெர்லின் கொடுக்கவில்லை.

இதுபற்றி காஜா, நந்த குமாரிடம் கூறி கடனை வசூலித்து தருமாறு கேட்டார்.

இந்த நிலையில் நந்த குமார், மெர்லினுக்கு போன் செய்து பணத்தை கேட்டு மிரட்டினார். அப்போது அவர்களிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

நந்தகுமார், மெர்லினிடம் நான் பல்லாவரத்தில் உள்ள ஒரு டீக்கடையில் தான் நிற்கிறேன். உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்றார். இதனால் மெர்லின் தனது ஆதரவாளர்கள் 3 பேருடன் அங்கு சென்றார். ரவுடி நந்தகுமாரை அவர்கள் சரமாரியாக வெட்டினார்கள். இதில் அவரது கை, வாய் போன்ற பகுதிகளில் வெட்டு விழுந்தது. பின்னர் 4 பேரும் தப்பிச் சென்று விட்டனர்.

பலத்த காயம் அடைந்த நந்தகுமார் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

இதுகுறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 பேரையும் தேடி வருகிறார்கள்.

Similar News