செய்திகள்

அச்சரப்பாக்கம் அருகே 6 கடைகளை உடைத்து கொள்ளை முயற்சி

Published On 2016-11-05 12:27 IST   |   Update On 2016-11-05 13:37:00 IST
அச்சரப்பாக்கம் அருகே 6 கடைகளை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் குறித்து போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேல்மருவத்தூர்:

அச்சரப்பாக்கம் அருகே கீழ் அத்திவாக்கம் பகுதியில் தொழுப்பேடு-ஒரத்தி சாலையில் ஒரே கட்டிடத்தில் 6 கடைகள் உள்ளன. இங்கு உரமருந்து கடை, அரிசி ஆலை, பெட்டிக்கடைகள், டீக்கடை உள்பட 6 கடைகள் செயல்பட்டு வருகின்றன.

நேற்று இரவு 6 கடைகளையும் அதன் உரிமையாளர்கள் பூட்டிவிட்டு சென்றனர்.

இரவில் கொள்ளையர்கள் சிலர் அங்கு வந்தனர். அவர்கள் 6 கடைகளின் பூட்டையும் உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த கல்லா பெட்டியை உடைத்து பார்த்தனர். ஆனால் 6 கடைகளிலுமே பணம் கிடைக்கவில்லை.

இதையடுத்து ஆத்திரத்தில் கடையில் இருந்த பொருட்களை தூக்கி வீசி சூறையாடினர். பின்னர் டீக்கடையில் இருந்த ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகளை எடுத்துக் கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து ஒரத்தி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

Similar News